top of page

எங்களைப் பற்றி

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் முத்தமிழ் மன்றம், 1998-ம் ஆண்டு கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களால் தமிழ் மன்றம் என்னும் பெயரில் துவங்கிவைக்கப்பட்டு, பின்பு 2005-ம் ஆண்டு முத்தமிழ் மன்றம் என்று பெயர் மாற்றம் பெற்று சிறப்பாக செயல்பெற்று வருகிறது.

நோக்கம் 

  1. தமிழ்த்தொண்டு ஆற்றல்.

  2. நற்றமிழ்மொழியின் மறைகளையும் சிறப்பையும் மாணாக்கர்களிடம் கொண்டு சேர்த்தல்.

  3. கலை இலக்கியப் போட்டிகளின்  மூலம் மாணாக்கர்களின் தனித்தமிழ்த் திறமை மற்றும் உயர்ந்த சிந்தனைகளை வெளிக்கொணர்தல் .

  4. பொறியியல் / தொழிற்நுட்ப மாணாக்கர்களின் அறிவியல் ஆய்வுகளை தாய்த்தமிழிலும் படைக்க ஊக்குவித்தல்.

  5. தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை ,கல்லூரியில் விழாக்கள் மூலம் மாணக்கர்களிடம் பறைசாற்றுதல்.

 

 

ஆக்கம் 

 

  1. தனித்தமிழ் மொழிவள மேம்பாடு.

  2. மாணாக்கர் செயல்திறன் மற்றும் சிந்தனை வளப்பெருக்கம்.

  3. பலதரப்பட்ட நிகழ்வு ஒருங்கிணைப்புகள் மூலம்,தலைமைப்பண்பு வெளிப்பாடு.

  4. எழுத்து, பேச்சு , ஓவியம், இசை , பாடல்,  நடனம், நாடகம், தமிழாய்வு  ஆகிய முதன்மைக் கலைத் துறைகளில் நமது மாணாக்கர்களின் படைப்பிற்கும் பங்களிப்பிற்கும் அங்கீகாரம்.

நிகழ்வுகள் தொகுப்பு

Gallery

முன்னோர்கள் மேற்கோள்கள்

“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழிய வே!”

-சுப்பிரமணிய பாரதி

bottom of page